வந்தவாசி, அக்.4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வந்தவாசியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளின் முன் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச திருவண்ணாமலை மண்டல பொருளாளர் எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.