செய்யாறு அருகேலாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

செய்யாறு, அக்.4: செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தை சேர்ந்தவர் ராதா(50), கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது கிராமத்தில் இருந்து கிளியாத்தூர் சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மின்கம்பங்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராதா லாரி சக்கரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகிறார்.

Related Stories: