பெரம்பலூர்,செப்.20:பொது மக்கள் வசிக்கும் ஊருக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துவெங்கனூர் கிராம இளை ஞர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், வே ப்பந்தட்டை தாலுக்கா, பெரி யம்மாபாளையம் ஊராட்சி க்கு உட்பட்டது வெங்கனூர் கிராமம். இவ்வூரைச் சேர் ந்த 30க்கும்மேற்பட்ட இளை ஞர்கள் பூசமுத்து மகன் மணிகண்டன் என்பவரது தலைமையில் நேற்று பெர ம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண் டு வந்து முற்றுகையிட்ட னர். பின்னர் அவர்கள் பெர ம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தாவிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்தி ருப்பதாவது : எங்களது வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தி னகுமார் என்பவர், சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் மக் கள் எதிர்ப்பைமீறி செல் போன் டவர் அமைக்க ஏற் பாடு செய்து வருகிறார். இதற்காக அவர் எவ்வித ஒப்புதலும் பெறவில்லை எனத் தெரிய வருகிறது.