புரட்டாசி கிருத்திகை சிறப்பு அபிஷேகம்

அரியலூர், செப். 20: செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளை பெற்று வாழ்வார்கள் என்பதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: