வந்தவாசி, செப்.20: வந்தவாசி அருகே நிலம் பாகப்பிரிவினை தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது ெசய்தனர். தலைமறைவாக உள்ள மருமகளை தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள்(60). இவருக்கு தர்மலிங்கம், வாசு என்ற மகன்களும், வித்யா, சிந்தாமணி என்ற மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். லட்சுமி அம்மாளின் கணவர் நடராஜன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் மூத்த மகன் தர்மலிங்கம் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், மூத்த மகள் வித்யா திருமணத்தின் போது நகைகள் போடாததால், நிலத்தை விற்பனை செய்து அவருக்கு கூடுதலாக பணம் கொடுக்கலாம் என லட்சுமி அம்மாள் கூறினாராம். இதற்கு தர்மலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து பாகப்பிரிவினை செய்யாமல் தடுத்து வந்தாராம். இதையடுத்து, 5 பேருக்கும் விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக, லட்சுமியம்மாள் வந்தவாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.