செய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

செய்யாறு, செப்.20: செய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரை சேர்ந்தவர் 14 வயது மாணவி. 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து, அவரது பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மருத்துவ உயரதிகாரிகள் மாணவியை திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி(31) என்பவர், ஆசை வார்த்தை மாணவியுடன் தனிமையில் இருந்ததால் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய் செய்யாறு மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, தட்சணாமூர்த்தியை நேற்று முன்தினம் கைது செய்J செய்யாறு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

Related Stories: