ஜெயங்கொண்டம், செப்.19: ஜெயங்கொண்டம் அருகே முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை கிராமம் ஆரோக்கியபுரம் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (32). இவர் இன்ஜினியரிங் முடித்து புதுச்சேரி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கர்மேல் மேரி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேனட் ஜெபி என்ற 2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் பட்டணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் உமாதேவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.