கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி மாடியிலிருந்து விழுந்து பிளம்பர் பலி

கும்மிடிப்பூண்டி, செப்.19: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல் பேட்டை பகுதியில்  தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளியில் மழைநீர் சேகரிக்கும் குழாய் பதிக்கும் பணியில் கவரைப்பேட்டையை சேர்ந்த முத்து (42) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது மூன்றாவது மாடியில் இருந்து குழாய் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தார்.இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: