திருவள்ளூர், செப். 19: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட உதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்த சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள், இச்சட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்கள், அமைப்புகளின் பங்கு மற்றும் பணியின் செயல்பாடுகள் குறித்தும், மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் செயல்படுத்துதல் குறித்தும் குழுவில் விவாதிக்கப்பட்டது.