தேவகோட்டை, செப். 17: பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக பெண்ணை கடத்திச் சென்று சொத்தை பதிந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் ஆரோக்கிசாமி மனைவி பவுல் அல்போன்ஸா(42). இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பலபேரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 10ம் தேதி செவ்வாய்கிழமை தேவகோட்டை ஞானானந்தகிரி நகரில் வளர்மதி என்பவரின் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பவுலின்அல்போன்ஸா சில நபர்களால் கடத்தப்பட்டார். சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.