காரைக்குடி, செப். 17: அழகப்பா பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் உள்ள பாடத்திட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாட வல்லுநர்களின் உதவியோடு சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது என துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறையின் சார்பில் நிலையான எரிசக்தி மற்றும் சென்சாருக்கான மேம்பட்ட பொருட்கள் என் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கின் தொடக்கவிழா நடந்தது. இயற்பியல் துறை தலைவர் ரவி வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமைவகித்து பேசுகையில், இப் பல்கலைக்கழக இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகள் தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ பிளஸ் தகுதி பெற உதவியாக இருந்தது. இப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள பாடத்திட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாட வல்லுநர்களின் உதவியோடு சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.