திண்டுக்கல், செப். 17: கொடைக்கானல் பூண்டியில் கஜா புயலில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லையென அப்பகுதி பெண்கள் கலெக்டரிடம் குமுறலுடன் மனு அளித்தனர்.
கொடைக்கானல் தாலுகா, பூண்டி கிராமத்தில் உள்ளது எம்ஜிஆர் காலனி. இப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதில் கடந்த கஜா புயலின்போது 22 வீடுகள் சேதமடைந்தன. இதற்கு எவ்வித நிதியுதவியும் இதுவரை வழங்கவில்லை. அதேபோல் இங்குள்ள கழிவுநீரை சுத்தம் செய்து பல நாட்களாகி விட்டது.