முசிறி, செப்.17: முசிறி அருகே பாலப்பட்டி மேற்கு கொட்டம் பகுதியில் மழையால் சாய்ந்த மின்கம்பங்களிலிருந்து தரையை தட்டிய மின்கம்பிகளால் 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டது. இதனால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சிக்குட்பட்ட பாலப்பட்டி மேற்கு கொட்டம் கிராமத்தில் கடந்த 3 தினங்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதியில் வசிப்போர் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். உடனடியாக மின்சாரம் வழங்கிட மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி தாலுகா திருத்தியமலை ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பட்டி மேற்கு கொட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. சாலையின் ஓரத்திற்கு அருகே இருந்த மண்ணை பொக்லின் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து தார் சாலைக்கு அணைவாக போடப்பட்டது.