ரோட்டரி கிளப் முப்பெரும் விழா

ராசிபுரம், செப்.17: ராசிபுரம் ரோட்டரி கிளப் ஆப் ராயல்  சார்பில், முப்பெரும் விழா ரோட்டரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் இளஞ்செழியன் தலைமை வகித்தார்.  செயலாளர் பூபாலன் வரவேற்றார்.  ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் சிவசுந்தரம், துணை ஆளுநர் சத்தியமுர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த மருத்துவ விருது பெற்ற டாக்டர் சுரோஷ்கண்ணா, நல்லாசிரியர் விருது பெற்ற தூய இருதய பள்ளி தலைமையாசிரியர் பவித்ரா மற்றும் 26 ஆசிரியர்களுக்கு விருது, கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திட்ட சேர்மன் ராஜூ, நந்தலால், அசோக்குமார், அன்பழகன், நடராஜன், டாக்டர் ஜெயசீலன், அருன்பாபு. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

Related Stories: