காஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மனித வாழ்வும் முழு உடல் பரிசோதனையும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம், செப்.17: காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மெடால் டயாக்னாஸ்டிக்ஸ்  இணைந்து மனிதவாழ்வும், முழு உடல்பரிசோதனையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் புண்ணியக்கோட்டி வரவேற்றார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் நீரிழிவு நோய் மருத்துவர் அகிலா ரவிக்குமார் கலந்து கொண்டு மனிதவாழ்வும் முழுஉடல் பரிசோதனையும் என்ற தலைப்பில் மனிதனின் ஆரோக்கியம், உடல் நலனில் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகள், உணவூட்டம்,  உடற்பருமன், நீரிழிவுநோய், தைராய்டு, ரத்த அழுத்தம், மலச்சிக்கல், ரத்த செல் குறைநோய்கள் பற்றியும் சாராசரி மனிதனுக்கு தேவையான சக்தி கலோரி அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்து விளக்கமளித்து, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார். கல்லூரி துணை முதல்வர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: