போச்சம்பள்ளி, செப்.17: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சந்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(60). எல்ஐசி ஏஜெண்டான இவர், நேற்று முன்தினம் மாலை, குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியசாமி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 1.50 லட்சம், 7 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. மேலும், அருகேயுள்ள மற்றொருவர் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 2 வெள்ளி கொலுசுகள், 20 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியசாமி அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.