பிஏபி கால்வாய் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை

உடுமலை,செப்.17: திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்துக்கு, நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. உடுமலை பங்களா மேடு என்ற இடத்தில் இருந்து உடுமலை கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இது 16.630 கிமீ நீளம் கொண்டது. இதன்மூலம் சுமார் 2,300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது, ரூ.5 கோடி செலவில் பிஏபி வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஆனால் எஸ்வி மில் பகுதியில், கால்வாயின் ஸ்லாப்புகள் பெயர்க்கப்பட்டு, இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. பாசனத்துக்காக வரும் 25-ம்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாய்க்கால் சீரமைக்கும் பணி முடியாதது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.தண்ணீர் திறப்பதற்கு முன்பாக சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: