மஞ்சூர், செப். 17:மஞ்சூர் - எடக்காடு சாலையில் அந்தரத்தில் தொங்கும் அபாயகர மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழையில் குந்தாபாலம், மெரிலேன்டு, கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி உள்பட மஞ்சூர் சுற்றிலும் பல்வேறு இடங்களில் ஏராளமான மரங்கள் விழுந்தது. மஞ்சூர் - எடக்காடு சாலையில் முக்கிமலை அருகே சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதுடன், அங்கிருந்த கற்பூர மரங்கள் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி, மண் சரிவுகளை அகற்றினர்.