மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

ஈரோடு, செப். 17:  ஈரோடு மாவட்டத்தில் சக்கர நாற்காலிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சிறப்பு முகாம்கள் தாலுகா அலுவலகங்களில் தனித்தனியாக நடக்கிறது. இதில், சத்தியமங்கலத்தில் வரும் 20ம் தேதியும், தாளவாடியில் 23ம் தேதியும், ஈரோட்டில் 27ம் தேதியும், கோபியில் அக்.,15ம் தேதியும், பவானியில் அக்.,18ம் தேதியும், அந்தியூரில் அக்.,22ம் தேதியும், பெருந்துறையில் நவ.,5ம் தேதியும், நம்பியூரில் நவ.,8ம் தேதியும், கொடுமுடியில் நவ.,12ம் தேதியும், மொடக்குறிச்சியில் நவ.,15ம் தேதியும் நடக்கிறது.

இந்த முகாம்களில் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகள் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு சக்கர நாற்காலிகள் பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: