வாகனம் மோதி காட்டுப்பன்றி பலி

சத்தியமங்கலம், செப்.17:  ஆசனூர் மாவட்ட வன அலுவலகம் அருகே காட்டுப்பன்றி சாலையை கடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் காட்டுப்பன்றி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது.தகவலறிந்த ஆசனூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த காட்டுப்பன்றியின் உடலை அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். கால்நடை மருத்துவர்  காட்டுப்பன்றியை உடற்கூறாய்வு செய்து வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். காட்டுப்பன்றியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: