மன்னார்குடி, செப். 17: நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான திடக் கழிவு மேலாண்மை குறித்து 3 ம் கட்ட பயிற்சி முகாம் மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மன்னார் குடி, பட்டுக்கோட்டை நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற் பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் கை யாளுதல் குறித்து 3 ம் கட்ட பயிற்சி முகாம் மன்னார்குடி நகராட்சி கோ பால சமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற துப்புரவுப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு, குப்பைகளை தரம் பிரித்தல், தரம் பிரிக்கப்பட்ட குப் பைகளை கையாளுதல், உரமாக்குதல், மறுசுழற்சிக்கு பயன் படுத்துதல் மற்றும் அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பாக அப்புற படுத்துதல் குறித்து பயிற்சியளிக்கப் பட்டது.