மன்னார்குடி, செப். 17: மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூர் கிராமத்தில் உள்ள கிராமப்புற நூலகத்தில் பணியாளர் இல்லாததால் 2 வருடங்களாக பூட்டி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நிரந்தர நூலகரை நியமன செய்ய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூர் மற்றும் அதன் சுற்று புற கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2011 ல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வாஞ்சியூரில் கிராமப்புற நூலகம் ஒன்று சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த நூலகம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.