சீரமைக்க கோரிக்கை புதுப்பிக்கப்பட்ட அண்ணாசிலை ரவுண்டானா திறப்பு

புதுக்கோட்டை, செப்.17: புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே புயலின்போது சேதமடைந்த அண்ணாசிலை ரவுண்டானா சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. புதுக்கோட்டை நகராட்சியில் உட்பட்ட காந்தி பூங்கா அருகே அண்ணா சிலை ரவுண்டானா உள்ளது. இந்த அண்ணாசிலை ரவுண்டானா கஜா புயலில் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் அண்ணாசிலை ரவுண்டானா சீரமைக்கும் பணி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில் வர்ணம் பூசுதல், புதிதாக ரவுண்டானா அமைத்தல், ஸ்டீல் படிக்கட்டுகள் அமைத்தல், செயற்கை நீரூற்று போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட அண்ணா சிலை ரவுண்டானா திறப்பு விழா நேற்று மாலையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணாசிலை ரவுண்டானாவை திறந்து வைத்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: