பொன்னமராவதி,செப்.17: பொன்னமராவதி பகுதியில் டெங்கு பாதிக்கப்பட்ட இரண்டு கிராமங்களில் தினகரன் செய்தி எதிரொலியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். டெங்கு பாதிக்கப்பட்ட கிராமங்கள் என்ற தலைப்பில் தினகரனில் செய்தி நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இயக்குனர் பரணிதரன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கண்டியாநத்தம் கிராமத்திற்கு சென்று டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். டெங்கு பாதித்தவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் உடல்நலம் குறித்து விசாரணை செய்தனர். இதில் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் நடமாடும் மருத்துவக்குழுவினர் பள்ளி, அங்கன்வாடி மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.