நிரவி பாரதிதாசன் அரசு நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால், செப்.17: காரைக்கால் நிரவி அரசு நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் நிரவி பாரதிதாசன் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் ரெக்ஸ் உள்ளிட்டோர் கண்காட்சி குறித்து பேசினர். கண்காட்சியை திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வனிதா திறந்துவைத்து, மாணவர்கள் அமைத்திருந்த அறிவியல் அரங்குகளை பார்வையிட்டார். சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பல்வேறு அறிவியல் சார்ந்த மாதிரிகள் வைத்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, நடுவர் குழுவினரால் சிறந்த மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு

கண்காட்சியை பார்வையிட்டனர்.

Related Stories: