காரைக்கால், செப்.17: காரைக்கோவில்பத்து தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை, பள்ளி உதவி தலைமையாசிரியர் ராஜசேகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் அறிவியல் கண்காட்சியுடன், தூய்மை இந்தியா குறித்தும், தூய்மைக்கு தங்களுடைய பங்களிப்பு குறித்தும் 7,8,9-ம் வகுப்பு மாணவர்கள் தங்களது கற்பனைத்திறனுக்கேற்ப, ஓவிய ஆசிரியர் காமராஜ் வழிகாட்டலின்படி ஓவியம் வரைந்து காட்சிக்கு வைத்திருந்தனர்.