வேதாரண்யம்,செப்.17: தஞ்சை சிவங்கை பூங்காவில் இருந்து கோடியக்கரை சரணாலயத்துக்கு மேலும் 5 மான்கள் கொண்டுவரப்பட்டன. இது வரை 32 மான்கள் வந்துள்ளன. தஞ்சை பெரியகோயில் அருகில் சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்குள் ஒரு பகுதியில் 41 மான்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது தஞ்சை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விரிவுப்படுத்தப்படுவதால் சிவகங்கை பூங்காக்குள் உள்ள மான்களை அங்கிருந்து கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் விடப்படுகின்றன. அதன்படி முதல் கட்டமாக 27 பெண் புள்ளி மான்களும், ஒரு ஆண் புள்ளி மானும் பாதுகாப்புடன் வாகனத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலய மையப்பகுதியான யானைபள்ளம் பகுதிக்கு இரண்டு முறையாக கொண்டு வந்து விடப்பட்டன. நேற்று தஞ்சை நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் நான்கு ஆண் மான்களும் ஒரு பெண் மான் உள்ளிட்ட ஐந்து மான்கள் கொண்டு வந்து விடப்பட்டன.