அச்சக உரிமையாளர்கள் வலியுறுத்தல் நாகையில் மக்கள் குறைதீர் முகாம் 255 மனுக்கள் குவிந்தன

நாகை, செப்.17: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர குறைதீர் கூட்டம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.வங்கிக் கடன், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 15 மனுக்களும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 240 மனுக்கள் என மொத்தம் 255 மனுக்கள் வந்தது. மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். வருவாய்த்துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வீதம் மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்கும் ஆணையினை வழங்கினார். டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: