கரூர், செப். 17: கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், இன்கிளைன் டிரெய்னர்ஸ் அமைப்பு இணைந்து விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் ஒன்றே மனிதனின் சுவாசம், இயற்கை அழிவுகளில் இருந்தும், நச்சு காற்றில் இருந்தும் நம் சுவாசத்தை மீட்டெடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். நாளைய பூமி பந்தின் அடையாளமான மழை, மரம், மனிதம் மலர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் 3500 விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டன.