கரூர் ராஜாஜி சாலையில் கழிவுநீர் தேக்கத்தால் கொசு தொல்லை

கரூர், செப். 17: கரூர் ராஜாஜி சாலையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைபெய்யும்போது கழிவுநீர் அடைபட்டு சாலையில் ஓடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது. வடிகால் அடைப்பினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: