திங்கள்சந்தை, செப். 17: திங்கள்சந்தை அருகே நடந்த பைக் விபத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். திங்கள்நகர் அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிபின்தாஸ் (19). நாகர்கோவிலில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். திக்கணங்கோடு அருகே வாளோடு பகுதியை சேர்ந்தவர் உதய அனீஷ் (20). மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒரு பைக்கில் திங்கள்நகர் வந்தனர். பின்னர் அங்கிருந்து தக்கலை நோக்கி சென்றனர். உதய அனீஷ் பைக்கை ஓட்டினார். பிபின்தாஸ் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளனர். ஆலங்கோடு அருகே ெசன்ற போது நிலைதடுமாறிய பைக் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கல் மீது மோதியது.