குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

சுசீந்திரம், செப். 17: சுசீந்திரம் அருகே உள்ள 18ம்படி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (42). தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை சுசீந்திரம் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த பகுதியில் சென்றவர்கள் கவனித்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: