தூத்துக்குடி, செப். 17: ஓட்டப்பிடாரம் தாலுகா கீழமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் தாசு தலைமையில் கத்தார்பாலு, வீரசமர், சுடலைமணி, கண்ணன், கருப்பசாமி உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இருப்பினும் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை மற்றும் சுகாதாரம் போன்ற எந்தவித வசதிகளும் சரிவர செய்து தரப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெரியவர்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.