தண்டராம்பட்டு, செப்.17: தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவர் புதுச்சேரியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பானுபிரியா(32). இவர்களுக்கு சஞ்சய்(8) என்ற மகனும், தர்ஷினி(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் வேலைக்கு சென்றுவிட்டு சம்பள பணத்தை வீட்டில் கொடுப்பதில்லையாம். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், கடந்த மாதம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் பானுபிரியா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த 1 மாதமாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரிக்கு வேலைக்கு சென்ற வெங்கடேசன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். பின்னர் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ன்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் வெங்கடேசன் தலையில் பலத்த காயம் இருந்தது. மர்ம ஆசாமிகள், வெங்கடேசனை குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, தண்டராம்பட்டு காவல் நிலையம் வந்த எஸ்பி சிபிசக்கரவர்த்தி கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் மனைவி உட்பட உறனர்களிடம் விசாரணை நடத்தினார். மர்மமான முறையில் லாரி டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.