நெல்லை, செப். 15: நெல்லையில் சர்வதேச முதலியார், பிள்ளைமார் (இம்பா) சங்கங்களின் தொழிலதிபர்கள் கூட்டம் நடந்தது. முதலியார், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களை இணைக்கும் முயற்சியாக சர்வதேச முதலியார், பிள்ளைமார் சங்கம் (இம்பா) என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தொழிலதிபர்களை இணைக்க உருவாக்கப்பட்டுள்ள ‘பிசினஸ் டூ பிசினஸ்’ (பிடூபி) அமைப்பின் கூட்டம் நெல்லை ஆர்ஆர் இன் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் நிர்வாகக் குழு உறுப்பினர் பொன்ராஜ் வரவேற்றார். இம்பா அமைப்பின் சேவைகள் குறித்து அமைப்பு செயலாளர் ரவி பிள்ளை பேசினார். பிடூபி அமைப்பின் நோக்கம் குறித்து அப்பு சந்திரசேகர் பேசினார். பொதுச்செயலாளர் ரகுராம் அமைப்பின் வளர்ச்சிகள் குறித்து பேசினார்.