திருச்சி, செப். 15: திருச்சியில் திமுக இளைஞரணி சேர்க்கை முகாமை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. சென்னையில் நடந்த முகாமை திமுக இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதுபோல் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த இளைஞரணி சேர்க்கை முகாமில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு விண்ணப்பங்களை வழங்கி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இந்த முகாமில், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.