திருச்சி, செப். 15: திருச்சியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செங்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி உஷா(52). கணவன், மனைவி இருவரும் நேற்றுமுன்தினம் மதியம் பைக்கில் சென்றனர். கோரையாறு பாலம் அருகே சென்றபோது, பின்னால் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் உஷா கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து உஷா எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.