பாடாலூர், செப். 15: ஆலத்தூர் தாலுகாவிலுள்ள பல்வேறு கிராம பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் மானாவாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம், சோளம், துவரை, உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் விதைப்பு செய்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக வானம் மழை பொழியாததால் மானாவாரி நிலங்களில் விதைப்பு செய்து முளைத்த பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டது.