காரைக்கால், செப்.15: காரைக்காலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வரும் ஜனவரியில் திறக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் மிகவும் பழுதாகிப்போனதால், அரசு விளையாட்டுத் திடல் அருகே, புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.8.5 கோடி செலவில் அமைக்கும் பணி, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
சுமார் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை, மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சிவகடாட்சம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.