கெங்கவல்லி, செப்.15: கெங்கவல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் வறண்டு கடந்த சுவேத நதியில் தண்ணீர் பெருக்கெடுத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கெங்கவல்லி, வீரகனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால், வறண்டு கிடந்த சுவேத நதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.