நல்லம்பள்ளி, செப்.15: தர்மபுரி மாவட்டம், அரூர் தெட்டாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அதியமான்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணி புரிந்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், வாரிசு அடிப்படைகளில் அவரது மனைவி மலர்(52), போக்குவரத்து கழக பணிமனையில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தார். இவரது மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், பணிமனையில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி அருகே, மலரின் காலணிகள் கிடந்துள்ளது. இதைப்பார்த்த சக ஊழியர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.