தேனியில் திடீர் மழை

தேனி, செப். 15: தேனியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனியில் கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் கொளுத்தியது. இதனால் சாலையில் நடைபயணிகள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் சாலையோர குளிர்பானக் கடைகளில் உஷ்ணத்தை குறைக்க குளிர்பானம் பருகுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

வெப்பச்சலனம் காரணமாக நேற்று காலை முதலே தேனியிம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில நேற்று மாலை 4 மணியளவில் திடீரென மழை பெய்தது. இதனால் கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: