திருப்புத்தூர், செப். 15: திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு உதவிபெறும் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பெண்கள் கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியை கல்லூரி செயலர் ஆறுமுகராஜன் துவக்கி வைத்தார். இதில் திருப்புத்தூர், காரைக்குடி, ராமநாதபுரம், சருகணி, கீழக்கரை, தெக்கூர் உள்ளிட்ட 19 கல்லூரியைச்சேர்ந்த கபடிக் குழுவினர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிக்கு ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியும் தேர்வு பெற்றன.