திருப்புத்தூர், செப். 15: திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி ராஜகாளி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வெள்ளி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து அர்ச்சனைகளும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.