திருவாடானை, செப். 15: திருவாடானை அருகே நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிபவர் ஜென்னத்மேரி (33). இவர் அரசூரில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கி மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சின்னக் கீரமங்கலத்தைச் சேர்ந்த பிரசாத் (23) என்பவர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி நேற்று முன்தினம் ஜன்னத்மேரியின் வீட்டில் கதவை தட்டினார்.