மதுரை, செப். 15: மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 132 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை, அண்ணாநகர், கே.கே.நகர், கே.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில், ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய ேபாலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதன்பேரில், உதவி கமிஷனர் ேவணுகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.