லாட்டரி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

ஈரோடு, செப். 15: ஈரோடு அருகே லாட்டரி விற்றதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  ஈரோடு மாணிக்கம்பாளையம் கண்ணதாசன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி விற்பனை நடப்பதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் ரெய்டு நடத்திய போது ஏராளமான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெங்குராஜ் என்பவரது மகள் ஜான்சி (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல மூலப்பாளையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஈரோடு நாடார்மேடு பூந்துறை ரோட்டை சேர்ந்த ஆனந்த் (44) என்பவரை ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Related Stories: