கடத்தூர், செப்.11: புதுரெட்டியூர் பகுதியில், குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி அதிமுக எம்எல்ஏவை மக்கள் முற்றுகையிட்டனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த புதுரெட்டியூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுரெட்டியூர் மற்றும் பழைய புதுரெட்டியூர் ஆகிய பகுதிகளுக்கு 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீருக்காக பல கிமீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.