காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தாயார் குளம் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடைந்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிற்னர். குளத்தில் உள்ள குப்பைகளை உடனே அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா். காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் காயாரோகணீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலுக்கான குளம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது. இந்த குளத்தை, தாயார் குளம் என அழைக்கப்படுகிறது.
இந்த குளத்தில் உள்ள தண்ணீரில் தேங்கியிருக்கும் குப்பை, கழிவுகளை உடனுக்குடன் அகற்றாததால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மற்ற கோயில் குளங்களுக்கு இல்லாத சிறப்பாக தாயார் குளம், ஐந்து மூலைகளை கொண்டுள்ளது. இந்த குளத்தில் கச்சபேஸ்வரர் கோயில் சார்பில், ஆண்டுக்கு ஒரு முறை தெப்ப உற்சவம் நடைபெறும். அதேபோல், அமாவாசை உள்ளிட்ட பிரத்யேகமான நாட்களில் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.