சேத்தியாத்தோப்பு, செப். 11:கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது அள்ளூர் அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியானது கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இப்பள்ளிக்கு சரியான மழைநீர் வடிகால் வசதி இல்லாமல்போனதால் மழைக்காலங்களில் இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் என பலரும் வேதனையடைந்து வந்தனர். இதுகுறித்து புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ துரை.கி.சரவணனிடம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.